நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மகேஸ்வரன்(27). இந்நிலையில் மகேஸ்வரன் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர் பெரியார்நகர் பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளிக்க சென்றுள்ளனர். மேலும் இவருக்கு நீச்சல் தெரியாமல் இருந்ததால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
