அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதனைதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கப்பட்டு உள்ளது. அதனைபோல தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போலீசாரும் இணைந்து இந்தப் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]
