பிரான்ஸ் முழுவதிலும் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டில் பல கிராமங்களில் குழாயில் தண்ணீரே வரவில்லை. அதற்குக் காரணம், சில இடங்களில் உள்ளூர் குடிநீர் வழங்கல் மையத்தில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டதால், அதைக் குடிப்பது பாதுகாப்பானதல்ல என்று கருதி அதிகாரிகளே தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவிட்டார்கள். ஏற்கனவே பிரான்ஸ் முழுமைக்கும் வெவ்வேறு மட்டத்தில் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூர் அதிகாரிகளும் கூடுதல் […]
