உத்தரப்பிரதேசத்தில் கடையின் வெளியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பல்பை காவலர் திருடும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரக்யராஜ் மாவட்டத்திலுள்ள புல்பூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ் வர்மா, அந்த பகுதியில் உள்ள கடையின் வெளியே எறிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. சென்ற 6ம் தேதியன்று தசரா கொண்டாட்டத்தின்போது, ராஜேஷ் இரவு பணியில் இருந்துள்ளார். அன்று தான் இச்சம்பவம் […]
