ஜம்மு காஷ்மீரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமான நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் ஆதா ஷகில் என்ற 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனவிலங்கு நிபுணர்கள், இராணுவத்தினருடன் இணைந்து இரவு முழுக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று பகலில் சிறுமியின் […]
