கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில் உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் குடியேறிவிட்ட கொரோனாவால் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா […]
