அமெரிக்காவில் ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் இருக்கின்ற சேலம் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் பிணைக் கைதிகளாக பலரை பிடித்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயிற்சி பெற்ற பேச்சுவார்த்தையாளரை வைத்து சந்தேகமுடைய நபருடன் அலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் ஆத்திரமடைந்த மர்ம […]
