பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் மேல இலந்தகுளத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரி பேச்சியம்மாள் தலைமையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த காரில் இருந்த ஒரு நபர் பணப்பையை அருகிலிருந்த டிராக்டரில் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அருண்குமார் என்பதும் […]
