நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு […]
