பர்கூரில் ஒற்றை யானை புகுந்து வீடு, காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் கொங்காடை மலைக்கிராமத்திற்கு நள்ளிரவில் யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது ராமன் என்பவரது வீட்டிற்கு அருகில் யானை வந்ததால் அங்கு உள்ள நாய்கள் குறைக்கத் தொடங்கியது. இதனால் வெளியே வந்து பார்த்த ராமன் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக ராமன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியே வராமல் பயத்துடன் பதுங்கி இருந்தனர். அப்போது வீட்டிற்கு முன்பு […]
