தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக […]
