பரளை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் பாலத்தில் கயிறு கட்டி கடந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு கடந்த 27ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் பார்திபனூரில் இருந்து கமுதி பரளை ஆற்றுக்கு 5,000கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு செய்யாமங்கலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் செய்யாமங்கலம், பிரண்டைகுளம், தானேந்தால், புதுபட்டி, முனியனேந்தல் போன்ற 5 கிராமத்திற்கு […]
