தேமுதிக கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. மேலும் ரொக்க பணமும் குறைவாக உள்ளது. இந்நிலையில் சொத்துவரி, மின் கட்டணம், […]
