தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துகுடி மாவட்டம், கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இருபது மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா […]
