அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]
