பிரிட்டனில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதால் தற்போது மக்கள் பலர் பிரிட்டன் நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் கொரோனா ஆபத்து நிறைந்த 33 பகுதிகளில் இருந்து பிரிட்டனிற்கு வரும் பயணிகள் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயப்படுத்த தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக பயணிகளிடம் 1,750 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறையானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. […]
