Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. 7.2-ஆக ரிக்டரில் பதிவு…!!!

தைவான் நாட்டில் இன்று பிற்பகல் நேரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. தைவானில், யுஜிங் பகுதியின் கிழக்கிலிருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் இன்று பிற்பகல் நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ரிக்டரில் 7.2 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக  தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

சீனாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 6.8-ஆக ரிக்டரில் பதிவு…!!!

சீனாவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் சிச்சுவான் என்னும் நகரில் இன்று திடீரென்று பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதறிய மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தார்கள். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் இந்த நிலநடுக்கமானது 6.8 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

BREAKING: பயங்கர நிலநடுக்கம்…. 130 பேர் உயிரிழப்பு….!!!!

ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

கெர்மடெக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்…. 6.4-ஆக ரிக்டரில் பதிவு…!!!

நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் இத்தீவில் உண்டான நிலநடுக்கம், சுமார் 6.4 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பின், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |