இலங்கை நாட்டில் சென்ற 1979 ஆம் வருடம் முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) நடைமுறையில் இருக்கிறது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் கடுமையான பிரிவுகள் இருக்கிறது. இந்த சட்டத்துக்கு உலகநாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. சென்ற 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த […]
