ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கப்ரீன் பகுதியில் சோதனை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். […]
