ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. […]
