பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். […]
