பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இரணியன் நகர், தென்பாதி, கற்பக நகர், சின்னத்தம்பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரனிடம் புகார் அளித்துள்ளனர். முதற்கட்டமாக நகராட்சி சார்பில் ஆணையர் ராஜகோபால் தலைமையில், சீர்காழி நகர்ப்பகுதியில் சுற்றித்திரிந்த […]
