தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு புதிய புதிய திட்டத்தையும், வகுப்புகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அனைத்து வித அறிவுத்திறனையும் பெறவேண்டுமென்று முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு science centre, lab on a bike, mobile science, I mobile உள்ளிட்ட வகுப்புகளை எடுக்க அகஸ்தியா பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. […]
