பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு, எஸ்.சி., காலனியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் சாதிக் பாஷா வேலை முடிந்ததும் நிறுவனத்தை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை பனியன் நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் […]
