அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]
