அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
