மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பணத்தை பறித்துச் சென்றுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அருகே இருக்கும் கல்பட்டு ஊராட்சியில் உள்ள எம்.ஜி.எம் நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இவரும் ஜோதிமா என்பவரும் சென்ற 14ஆம் தேதி காலையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்கள். பின் அவர்கள் கிராமத்தில் இருக்கும் கனரா வங்கியில் பணமாக பெற்றார்கள். […]
