தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை 24 ஆயிரம் ரூபாயாகவும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 18,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
