சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 1000 இடங்களில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் […]
