மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் அரசு பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் உயிரியல் ஆசிரியராக திருமலை மூர்த்தி வேலை பார்த்து வந்தார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து கோபியில் உள்ள சிறைச்சாலையில் திருமலை […]
