ஆசிரியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் மலைராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுன் தங்கம் என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மலைராஜன் திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டில் சாத்தூரில் நடந்த கொலை சம்பவத்தில் மலைராஜன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு மலை ராஜனை அதிகாரிகள் […]
