தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]
