தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் […]
