தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களும் தங்களை அதிக அளவில் அப்கிரெட் செய்து கொள்கின்றனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது மக்கள் அனைவரும் இணைய வசதி மூலம் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள். மேலும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கையில் பணம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைளான கூகுள் பே, போன்பே அமெசான் போன்ற தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். […]
