வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]
