நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து தங்கதாலி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு பகுதியில் செல்வம் என்பவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாள் மருத்துவ செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரரிடம் 10,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கிகொண்டு பாண்டியம்மாள் அரசு பேருந்தில் ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று […]
