வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்டன்புரம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கார்த்திகா வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் கார்த்திகா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் […]
