மகன் அனுப்பிய பணத்தை கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரப்புடையான் கிராமத்தில் சின்னக்காளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் திருப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த நிலையில் தனது தங்கைக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பதற்காக உறவினரான மணிவேல் என்பவரின் வங்கி கணக்கில் 10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். மகன் அனுப்பிய பணத்தை கேட்ட சின்னக்காளை குடும்பத்திற்கும், மணிவேல் குடும்பத்திற்கும் இடையே […]
