கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணி நகரில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் முத்துராமலிங்கபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிவா என்பவர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து மணிகண்டன் காவல் […]
