ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடி ஆக விளங்கிவரும் தர்மபுரி மாவட்டத்தில் பட்டு விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் வெண் பட்டுக் கூடுகளை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்கி வருகிறது. அங்கிருந்து பெருமளவில் வெண் பட்டுக்கூடுகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பட்டுக்கூடு இறக்குமதி தடைபட்டதால், இந்தியாவில் பட்டுக்கூடு விலை அதிகரித்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் […]
