பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா […]
