மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]
