திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பேட்டரி பட்டனை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் 2 வயது லித்திக்சரண். கடந்த 21ஆம் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பட்டன் பேட்டரியை விழுங்கியுள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடியபோது லித்திக்சரண் அதை விழுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை […]
