ஆகஸ்டு 10-ல் ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்ட பேரவை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 22- ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 10,696 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
