உக்ரைனுக்கு எதிரான போருக்கிடையே ரஷ்ய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போரானது 6 மாதங்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனிலுள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த போரானது நீண்டு கொண்டே செல்கின்றது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே […]
