மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சடையநேரியில் அறிவுமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அறிவுமணி மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தின்போது அறிவுமணிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அறிவுமணி பலத்தகாயம் அடைந்த நிலையில் அவரது உறவினர் […]
