மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]
