டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் மூசா(47) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது அது காலியானது தெரிந்தது. இதனால் கடையில் […]
