தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது. […]
