கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.